150 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் செயல்பாடுகள் மற்றும் செலவினங்க ளை கண்காணித்து வரும் நிறுவனங்களில் ஒன்று இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை யாளர் (CAG) அலுவலகம் ஆகும். இதன் அறிக் கைகளில் வெளியிடப்படும் விவரங்கள் உண்மை யையும் புள்ளி விவரங்களின் முழுமையான துல்லி யத்தையும் உறுதி செய்பவை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சமீப காலங்களில் (அதாவது, மோடி ஆட்சியில்) நாடாளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் செயல் பாடுகள் குறித்த தணிக்கை அறிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் 54, 2016-இல் 43, 2017-இல் 50 என்றிருந்த அறிக்கைகளின் எண்ணிக்கை, 2018-இல் 19, 2020-இல் 17, 2021-இல் 18, 2022-இல் 30, 2023-இல் 16 அறிக்கைகள் என்று குறைந்துள்ளன.
குறைவான எண்ணிக்கையிலான அறிக்கை கள் மற்றும் அந்த அறிக்கைகள் மீது நாடாளு மன்றத்தில் விவாதம் எதுவும் நடைபெறாதது ஆகிய இந்த இரண்டு விஷயங்களும், குடிமக்க ளின் உரிமையை மறுப்பதாக இருக்கிறது.
2023-ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் செயல் பாடுகள் தொடர்பான, சிஏஜி-யின் 16 அறிக்கை கள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் செய்த தவறான அல்லது அதிகப்படியான செலவினங்கள் குறித்து பல விவரங்களை அந்த அறிக்கைகள் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்தன.
சமீபத்திய ஊழல்கள்
இவ்வாறு சிஏஜி அறிக்கைகள் வெளிக்கொண்டு வந்த தவறான செலவினங்களில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் சாலைத் திட்டங்களில், அளவுக்கு அதிகமான மேற்கொள் ளப்பட்டுள்ள செலவுகள், ஒன்றிய அரசின் முதன்மை சுகாதாரத் திட்டமான (Flagship Health Scheme) ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழான செலவினங்களில் நடந்துள்ள முறைகேடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அதிகாரிகள் இடமாற்றம்!
இவ்வாறான மோசடிகள் குறித்த அறிக்கை களை சிஏஜி பகிரங்கப்படுத்திய சிறிது நேரத்தி லேயே இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்ட நிகழ்வு கவலை அளிப் பதாகும். நேர்மையாக இருந்ததற்காகவும் தவறான செயல்களை அம்பலப்படுத்தியதற்காகவும், இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? என்ற சந்தேகத்தையும் பணிமாற்ற நடவடிக்கை ஏற்படுத்துகிறது.
இந்த அதிகாரிகள் (தகுதியான சட்ட பின்புலம் இல்லாவிட்டாலும் கூட) சட்ட அதி காரியாகவும், ராஷ்டிர பாஷா பிரிவு போன்ற முக்கியமற்ற பதவிகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்போது பணி புரியும் இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர்.
ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தணிக்கை ஆய்வு நிறுத்தப்பட்டது. கள தணிக்கை பணிகள் (Field Audit) நிறுத் தப்பட்டன என்றால் சிஏஜி முடக்கப்பட்டு செயல் இழந்துவிட்டது என்றுதான் பொருள். இது ஒரு கடு மையான அரசியல் அமைப்பு சட்ட மீறலாகும்.
ஊழல் அரசுக்கு முட்டுக் கொடுப்பது!
சிஏஜி அறிக்கைகளுக்கு எதிராக அமைச்சர் கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஊடகங்க ளுக்கு அறிக்கை அளித்தது கவலை அளிக்கும் போக்காகும். இதுபோன்ற பொது விவாதங்களில் சிஏஜி பங்கேற்காது, பங்கேற்று தங்கள் அறிக்கை யின் உண்மைத்தன்மையை விளக்க முடியாது என்பதால், அமைச்சர்களின் பேட்டிகள் மூலம் சிஏஜி-யின் அதிகாரமும் நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அதன் மதிப்பையும் குறைத்துள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சர்களும், அமைச்சக அதிகாரிகளும் சிஏஜி-யின் அறிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க முற்படுகின்றனர். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தி ற்கு முட்டு கொடுத்து தூக்கி நிறுத்திட ஓடு கிறார்கள். ‘துவாரகா அதிவேக விரைவு சாலை’ தொடர்பான சிஏஜி-யின் அறிக்கைக்கு எதிராக ஒரு அமைச்சர், ‘அதில் பிழை உள்ளது’ என்று ஓடோடி வந்து, அரசைக் காப்பாற்ற முயல்கிறார். அரசாங் கத்தின் கணக்குகள் குறித்த சிஏஜி-யின் அவ தானிப்புகள் குறித்து 17.10.2023 அன்றைய டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியை நிதி அமைச்சகம் மறுத்தது.
சிஏஜி-யின் ஒவ்வொரு அவதானிப்பிற்கும் விரிவான புள்ளி விவரங்களை வெளியிட்டு பதில் களை அளித்தது. எனினும், இதுகுறித்து சிஏஜி உட னடியாக பதில் அளிக்க முடியாது என்பதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிக்கை களே இந்த விஷயத்தில், ஒருதலைப்பட்ச உண்மை யாக மாறுகின்றன. இது சரியான அணுகுமுறை யாக அல்ல.
இது, உண்மைக்கு புறம்பான, விளக்கம் பெற முடியாத ஊடக சர்ச்சைகளில் இருந்து அரசியல் அமைப்பு நிறுவனங்களில் ஒன்றான சிஏஜியை பாதுகாப்பதாக இருக்காது. ஆனால், நாம் தற்போது காணும் போக்கு உண்மையில் கவலை அளிக்கிறது.
ஒரு சில விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்க்கையில், சிஏஜி எப்போதும் நேர்மையான, முழுமையான, வெளிப்படைத் தன்மைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அத்தகைய நிறுவனம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரி கிறது. எனவே அதன் உயரிய நோக்கம், சுதந்திரச் செயல்பாடுகளை சமரசம் செய்யாமல் இருக்கவும் நிறுவப்பட்ட செயல்முறைகள், கட்டுப்பாடுகள் சிதைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் உங்கள் அலுவலகத்தின் அதிகா ரத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய சீர்குலைவுகள் நமது ஜனநாயகத்தை பெரிதும் சேதப்படுத்தும். தமிழில்: கடலூர் சுகுமாரன்